5 / 10New Believer Course · 10 அத்தியாயங்கள்

5. Savior, Lord, and Friend

When we receive God’s forgiveness, how does our relationship with Jesus change? Description: When we turn to God and away from evil He becomes our life and renews our mind.

உங்களுடையதை கேளுங்கள்

வேதாகம மேற்கோள்கள்

பகிரவும்
John 15:13

Greater love has no one than this, that he lay down his life for his friends.

Berean Standard Bible

Public Domain

மேலும் படிக்க…
இலவச வளங்கள்

வேதாகமத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

எங்கள் வேதாகம ஆய்வில் சேருங்கள்

உரைநகல்

Tamil (தமிழ்)
தேவனின் மன்னிப்பைப் பெற்ற பிறகு, நமக்கும் இயேசுவுக்கும் இடையேயான உறவு எவ்வாறு முறிவடையும்? பரிசுத்த வாழ்வை வாழ்வதில் அனைவருமே தோல்வி அடைகிறோம். எனவே, நாம் எல்லாவற்றுக்கும் தேவனையே நம்பியிருக்கிறோம். தேவனே நமக்கு மன்னிப்பையும் புதிய வாழ்வையும் வழங்குவதால் அவரே நமக்கு இரட்சகர். புதிய வாழ்வு வாழ நமக்கு அதிகாரம் வழங்குவதால், அவரே நமது கர்த்தர் ஆகிறார். கர்த்தர் என்பவர் தமது ஊழியர்களை வழிநடத்துபவராவார், கர்த்தரின் வழியை கடைபிடித்து அவ்வூழியர்கள் கீழ்படிந்து வாழ்வார்கள். ஊழியர்களைப் பாதுகாத்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்தையும் வழங்குகிறார், அவர்கள் அவருக்குச் சேவை செய்கிறார்கள். அவர் நமக்கு கர்த்தராக மட்டுமல்ல. அவர் நமக்கு நெருங்கிய நண்பனாக இருக்கவும் விரும்புகிறார். இயேசு மரிப்பதற்கு முன், தன்னைப் பின்தொடர்ந்தவர்களை நண்பர்களே என்று அழைக்கிறார். அவர் உயிர்த்தெழுந்த பின், அவர் செய்ய விரும்பிய முதல் விஷயம் நண்பர்களுடன் உணவருந்துவது. அவரது கைகளிலும் பிற பகுதிகளிலும் உள்ள காயங்களை அவர்களிடம் காட்டினார். அவர்கள் மீது அவர் அன்பு கொண்டிருந்தார், அவர்களோடு என்றும் இருக்க விரும்பினார், அதை எடுத்துக்காட்டும் விதமாக அவர் மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். எப்போதும், அவர் நம்முடன் இருக்கிறார், மன்னித்தல், வழிகாட்டுதல், வலிமையாக்குதல் மேலும் நமது எதிரியிடமிருந்து நம்மைப் பாதுகாத்தல் வழியாக நமக்குள் இருக்கும் தீங்குகள் உட்பட, நம்மை பாதுகாக்கிறார். நமது இரட்சகராக, கர்த்தராக, அது மட்டுமின்றி அவர் நமது நண்பராகவும் இருக்கிறார்.
JesusFilm